பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு

Bharatiya Janata Party United Kingdom India
By Sajithra Jan 20, 2025 10:19 PM GMT
Report

இந்திய (India) - ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது, கடந்த 17ஆம் திகதி மாலை 6 மணியளவில் லண்டனில் (London) உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழாவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான, வானதி சீனிவாசன் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்துள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

பிரித்தானிய தமிழர் பேரவை

இதன்போது, வானதி சீனிவாசனுக்கான சிறப்புக் காணொளி ஒன்று திரையிடப்பட்டுள்ளது. இக்காணொளியில், வானதி சீனிவாசன், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதையும், இவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் இடையேயான நீண்ட கால உறவு குறித்தும் விவரணப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு | Uk A Bridge Of Indian Eelam Tamil Relations Event

இதனை தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் சர்மிளா வரதராஜ் உரையாற்றியுள்ளார். 

மிக குறைந்த வயதில் வொன்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், “பல்லின பாரம்பரியத்தினை அடிப்படையாக கொண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்து சனநாயக நாடாளுமன்ற “ஒன்றிய” அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

மாறாக இலங்கை தன்னை தானே சிதைத்து கொள்ளும் ஒற்றை இன, ஒற்றை மத, ஒற்றை மொழி நாடாக சம உரிமைகளை மறுதலித்து, தொடரும் வன்முறை சுழற்சி, படுகொலைகள் என 30 ஆண்டு கால யுத்தத்தினை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டது.

அம்பாறையில் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள்

அம்பாறையில் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் தற்போதைய நிலை 

சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அதனை வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது.

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு | Uk A Bridge Of Indian Eelam Tamil Relations Event

பிரித்தானிய தமிழர் பேரவை, ஐ.நா. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுடனும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதுடன் ஐ.நா.வில் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை தற்போது இருக்கும் நிலைக்கு முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) உறுப்பு நாடுகள், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (SLAP) அமைத்து சாட்சியங்களை திரட்டி வருகின்றது.

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு | Uk A Bridge Of Indian Eelam Tamil Relations Event

குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை. BTF ஒரு குற்றவியல் விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான அடுத்த படிகளில் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா அண்மையில் விடுத்த அறிக்கையில், "தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்" என குறிப்பிட்டிருந்தது.

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு | Uk A Bridge Of Indian Eelam Tamil Relations Event

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில், சுதந்திரமாக வாழக் கூடிய எதிர்காலம் உருவாகும் வரை BTF உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்” என தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து பல்வேறுபட்ட நிகழ்வுகளும், உரைகளும், ஈழத்தமிழர்களுடனான கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெற்றுள்ளன. 

அம்பாறை கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பு: மூழ்கிய விளைநிலங்கள்

அம்பாறை கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பு: மூழ்கிய விளைநிலங்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US