தம்மை சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பில
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தம்மை சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.
அமைச்சின் பல பணியாளர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளானமையை அடுத்தே அவர், தம்மை சுயத்தனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தநிலையில் கிருமி தொற்று நீக்கல் செயல்முறை காரணமாக எரிசக்தி அமைச்சகம் இன்று முதல் ஆகஸ்ட் 6 வரை மூடப்படும் என்று அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சின் பல அதிகாரிகள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, எனினும் தமக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான என்டிஜென் சோதனையில் எதிர்மறையாக இருந்ததாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சுய தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்ததாக அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Ministry of Energy is closed until Friday 6th after sanitization because several officers were found positive for COVID-19. Although my antigen test recorded negative, I am in quarantine from today.
— Udaya Gammanpila (@UPGammanpila) August 3, 2021
I wish speedy recovery for all affected and urge everybody to stay safe