கபிலவின் மறைவையடுத்து மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து உதயங்க வெளியிட்ட அதிரடி பதிவு
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விமான கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்ட இருவர் தான் கபில சந்திரசேன மற்றும் உதயங்க வீரதுங்க.
ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு எயார்பஸ் கொள்வனவு மோசடி மற்றும் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது கபில சந்திரசேனவின் எதிர்பாராத மறைவையடுத்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ள உதயங்க வீரதுங்க திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபவித்த துன்பங்கள்
'நாம் இருவரும் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் மத்தியில் இன்று நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து யாருக்கும் சொல்லாமல் தனியாகச் செல்லும் முதலாவது நபரோ அல்லது கடைசி நபரோ நீங்கள் அல்ல' என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
என் நண்பர் கபில! நான் உங்களை முதன்முதலில் கொழும்பு கெப்ரி கிளப்பில் (Capri Club) தான் சந்தித்தேன். அன்று நீங்கள் தொலைத்தொடர்புத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய ஒரு நபர்.
பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் கொழும்பு-மொஸ்கோ இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு ரஷ்ய சுற்றுலாத் துறையில் உள்ள பலரின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
அரசியல் பழிவாங்கல்
2015-க்குப் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு அரசியல் பலிக்கடாவாக உங்களைப் போலவே எனக்கும் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
உங்களுக்கு ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் எனக்கு மிக் விமான (MiG)கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் சட்ட நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட நல்லாட்சி கும்பலால் எனக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது.
2020 பிப்ரவரி 14 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கை வந்த என்னை நீதவான் ரங்க திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் எனது முதல் இரவை உங்களுடனும் ரஞ்சன் ராமநாயக்கவுடனும் ஒரே சிறையறையில் கழித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
வெலிக்கடை விளக்கமறியல் சிறையில்
வெலிக்கடை விளக்கமறியலில் இருந்த நாம் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிணை பெறுவதற்கு அதே நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையிலேயே ஆஜராக வேண்டியிருந்தது.
அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பல ஆண்டுகளாக அநீதிக்கு எதிராக மௌனப் போராட்டத்தை நடத்திய கபில சந்திரசேன எம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டார்.
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்பக் காலத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் எமக்கிருவருக்காகும்.
இது தற்செயலானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு 2024 இல் அந்தத் தடைக்குள்ளான 12 பேரில் இலங்கையிலிருந்து இத்தகைய தடையைச் சந்தித்தவர்கள் நாம் இருவர் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பிரப்புக்கள் அரசியல் முறைமைக்கு (Regime Politics) எதிராக முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் அநேகம்
நாம் இருவரும் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கு மத்தியில் இன்று நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து யாருக்கும் சொல்லாமல் தனியாகச் செல்லும் முதலாவது நபரோ அல்லது கடைசி நபரோ நீங்கள் அல்ல என்பதைப் பதிவு செய்கிறேன்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam