பிரான்ஸில் தமிழ்ச்செல்வனுடன் ஒன்றாக சென்ற போது ஏற்பட்ட மோசமான அனுபவம்(Video)
பிரான்ஸில் தமிழ்ச்செல்வனுடன் ஒன்றாக சென்ற போது மோசமான அனுபவம் ஏற்பட்டது என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ்ச்செல்வனும் அவர்களுடைய குழுவும் பிரான்ஸிக்கு வந்திருந்தனர். அவரை எனக்கு தெரியும் என்பதால் அவருடைய வாகனத்தில் நானும் எனது துணைவியாரும் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.
அவ்வேளையில், பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பிற்கு பொறுப்பாக இருந்தவரும் அவருடன் இணைந்தவர்களும் மிக மோசமாக நடந்துகொண்டார்கள்.
அந்த சம்பவத்தை தமிழ்ச்செல்வனும் நேராக கண்டார். அதற்கான நடவடிக்கையை நாட்டிற்கு சென்றதும் எடுத்தார்.
மற்றொரு சம்பவம் ஐ.நா மனித உரிமை சபை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துக்கொள்ளும் கூட்டம் நடைபெறும்.
இப்படி 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே அருட்தந்தை இமானுவேல் மற்றும் கிருபாகரன் ஆகியோர் உரையாற்றுவர்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இறுதிவரை எங்களை பேசவிடவில்லை.”என தெரிவித்துள்ளார்.