P2P போராட்டம்! இராணுவ முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட போது குழப்பத்தை ஏற்படுத்திய சுமந்திரன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பெயரில் முன்னதாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சுமந்திரனும் சாணக்கியனும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் இயக்கத்தின் தலைமை ஒருங்கினைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த அவர்,
"குறித்த போராட்டத்தின் போது சுமந்திரனும் சாணக்கியனும் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் தாமே அந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவது போல பிரதான ஏற்பாட்டு குழுவின் வாகனத்திற்கு முன்னரே ஆரம்ப இடத்திற்கு சென்று விட்டனர்.
இதன்போது, ஏனைய அரசியல் பிரதிநிதிகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் மற்றும் மத தலைவர்களையும் புறந்தள்ளிவிட்டு ஏதோ தாங்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்து வருவது போல ஆரம்பத்திலிருந்து பொலிகண்டி வரை செயற்பட்டு வந்தார்கள்.
அவர்களின் சுயநல அரசியல் இதிலே தெள்ளதெளிவாக வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri