பெரும் பாரதூரமான நிலைமைகளை ஏற்படுத்தும் கனடா பொலிஸ் அதிகாரியின் இலங்கை விஜயம்
கனடாவில் உள்ள உயர் தமிழ் பொலிஸ் அதிகாரி இலங்கையின் உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை சந்தித்தமையானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவிக்க கூடும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் உதவி பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உயர் நீதிமன்றத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இவர் நேரடியாக சித்திரவதைகள், சில படுகொலைகளுக்கு உதவியமை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஒருவரின் அழைப்பினை ஏற்று கனடாவின் உயர் தமிழ் பொலிஸ் அதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இவரை சந்தித்திருந்தமை பாரதூரமான நிலைமைகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri