யாழில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மரக் குற்றிகள் மீட்பு
வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம.கோணேஸ்வரன் தலைமையின் கீழ் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்ந்து சென்றனர்.
சாரதி கைது
இதன்போது, மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்க தயாரான போது கைப்பற்றியதுடன் சாரதியை கைது செய்துள்ளனர்.

20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 52 தேக்கமரக்குற்றிகளுடன் குறித்த பாரவூர்தியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த பாரவூர்தி நீண்ட நாட்களாக சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




