சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ஏர் இந்தியா நிறுவனம் இன்று (03) துபாயிலிருந்து இந்திய தலைநகருக்கு தனது முதல் இந்திய விமானத்தை இயக்கியுள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கில் சிக்கித்தவித்த 149 பயணிகள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியம் முழுவதும் பயண குழப்பம்
149 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை ஏற்றிச்சென்ற AI916D விமானம் புது டில்லியை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் கூட்டுப்போரால், பிராந்தியம் முழுவதும் பயணக்குழப்பம் நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
துபாய் விமான நிலைய ஆணையம் சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான நுழைவாயிலான துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் விமான நிலையத்திலிருந்து "சிறிய எண்ணிக்கையிலான" விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத்தகவல்
துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை மாலையில் "வரையறுக்கப்பட்ட" எண்ணிக்கையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் முன்னதாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் முன்னுரிமை பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீடிக்கும் போர் பதற்றத்தினால் பணவீக்கத்தில் பெரும் தாக்கம்! எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam