நடுவானில் திடீரென மீண்டும் நாடு திரும்பிய அமெரிக்க விமானம்!காரணம் வெளியானது
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அமெரிக்கா விமானம் நடுவானிலேயே திரும்பி சென்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டெல்டா நிறுவனத்தின் விமானம், சியாட்டில் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென அந்த விமானம் நடுவானிலேயே திரும்பி அமெரிக்காவிற்கே வந்துள்ளது.
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததே விமானத்தை தரையிறக்காததற்கு காரணம் என டெல்டா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு சீனா தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.