மட்டக்களப்பின் இருவேறு இடங்களில் இரு பெண்கள் கைது
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 30 லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனையில் நேற்று பெண் ஒருவரை கஞ்சாவுடன் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இருவேறு இடங்களில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
