ஸ்பெயினில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரித்தானியர்கள்.. துப்பாக்கிதாரியின் கொடூர தாக்குதல்
தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு மதுபான விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிரித்தானியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு
ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரிசார்ட் நகரமான ஃபுயென்கிரோலாவில், ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த மோசமான தாக்குதலில், முகமூடி அணிந்த துப்பாக்கிதாரியால் இரண்டு பிரித்தானியாின் ஸ்காட்டிஷ் தீவினை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகமூடி அணிந்த தாக்குதல்தாரிகள் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர், அவர்களில் ஒருவர் வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், துப்பாக்கிதாரி "சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும், தற்போது தீவிர பொலிஸ் தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் மாலகா அரசியல்வாதி பிரான்சிஸ்கோ ஜேவியர் சலாஸ் உறுதிப்படுத்தினார். இந்த இரட்டை கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri