வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! உடலில் காணப்படும் காயங்களால் எழுந்துள்ள சந்தேகம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவு மற்றும் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நேற்று (12.08.2023) பதிவாகியுள்ளன.
வலஸ்முல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகல்கொடெல்லய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை
உயிரிழந்த பெண்ணின் தலையில் பல இரத்தக் கறைகள் மற்றும் காயங்கள் காணப்பட்டதை அவதானித்த நிலையில் இந்த மரணம் கொலையா என்பது தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கிரிந்திவெல-ஹங்கமுவத்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த நபர் ஒருவர், ரதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தாக்குதலினால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri