திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட இருவர் கைது
திருகோணமலை, சேருநுவர காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட இருவரை சேருநுவர பொலிஸாரினால் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெருகல் மற்றும் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் சேருநுவர காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய போது அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.