மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஆதரவான வர்த்தகர் உட்பட இரு சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட பொருளாதார நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பூகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து சில தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் கைதான வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்ளிட்ட இருவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான 39 வயதுடைய நபரும் 44 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
