சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபடவிருந்த இரு நபர்கள் கைது!(Photos)
புதுக்குடியிருப்பு - நெத்தலி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடவிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் 40 லிற்றர் மதுபானத்தை எடுத்து சென்ற இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் வைத்திருந்த 40 லிற்றர் மதுபானத்தையும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி . எம் . சதுரங்க தெரிவித்துள்ளார்.



