பாடசாலை காவலாளி உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது
கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விநியோகம்
கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய நபர் ஒருவர் பாடசாலை ஒன்றின் காவலாளி எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் நீண்டகாலமாக இப்பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தனரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri