மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது!
கொழும்பு உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ ஆனந்தராம வீதியும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொட்டவல கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41,914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.