புதுக்குடியிருப்பில் மேலும் இருவர் கோவிட் தொற்றால் மரணம்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் இரண்டு பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களில் ஒருவர் சுகவீனம் காரணமாகப் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (06) மரணமடைந்தார். மற்றைய ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவரது வீட்டில் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் வெள்ளப்பள்ளம் மற்றும் ஆற்றுப்புலவு பகுதியைச் சேர்ந்த 32, 69 வயதுடைய இருவரே மரணமடைந்துள்ளனர்.
குறித்த இரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் 11 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
