இலங்கையில் மேலும் இருவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலி!
இலங்கையில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் 63 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 158 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.