நாட்டில் மேலும் இரண்டு கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 2 கோவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புத்தளம் பகுதியை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இதனையடுத்து அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கோவிட், நிமோனியா மற்றும் குருதி விசமானமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பத்தேகம பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் இன்று மரணித்தார்.கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து அவருக்கு கோவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து பிம்புர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோவிட், நிமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.