ஒரே நேரத்தில் இரு முக்கிய பதவி! நாடாளுமன்ற குழுவான கோப் கடும் அதிருப்தி
இலங்கையின் முக்கிய அமைச்சின் செயலாளரொருவர் ஒரே நேரத்தில் அதே அமைச்சின் கீழ் நேரடியாக வரும் ஒரு நிறுவனத்தின் தலைவர் பதவியை எவ்வாறு வகித்தார் என்பது குறித்து, பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற குழுவான கோப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவின் அழைக்கப்பட்டபோது, அமைச்சின் செயலாளரே நிறுவனத்தின் தலைவராகவும் பிரசன்னமாகியிருந்தார்.
செயலாளரை பதிவு செய்யுமாறு உத்தரவு
இதன்போது அமைச்சின் பிரதம அதிகாரியான செயலாளர், அதே அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றின் தலைவராக இருப்பது மிகவும் சிக்கலை ஏற்படுத்துவதாக கோப் குழுவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து செயலாளரை விலகுமாறு செயலாளர் கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 நாட்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
