மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு வீதி விபத்து! இருவர் பலி
மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய இளைஞர்
வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

வீதி விபத்தில் கிரான் பிரதான வீதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்ததுள்ளார்.
கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 சிறுவர்கள்
இதேவேளை சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்ததுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர்.

வேககட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்தில்உயிரிழந்ததுடன் 14, மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam