முல்லைத்தீவில் இரு குழுக்களிடையே மோதல்: முற்றாக எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்(Photos)
முல்லைத்தீவு - மல்லாவி, திருநகர் பகுதியில் இரு குழுக்களுகிடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (01) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்தில் நேற்றிரவு இரு குழுக்களுகிடையே மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதனால் பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதுடன், மோதலின் காரணமாக எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தலைக்கவசம் மற்றும் பாதணிகள் என்பனவும் காணப்படுகின்றதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் யாரையாவது கடத்தி வந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மல்லாவி பொலிஸாரின் துணையுடன் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது.



ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
