இந்திய கடற்படையினரால் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் கைது
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது மீனவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் இருவரும் தொழிலுக்கு சென்றபோது எல்லை தாண்டி சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த இந்திய கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.