வாழைச்சேனையில் இரு சிறுவர்கள் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் மேற்கொள்ள முற்பட்ட இரு சிறுவர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை வீடு ஒன்றில் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி வீட்டில் தனிமையிலிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன்,, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.