மோட்டார் குண்டுகளுடன் இருவர் கைது
வெடி மருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் நேற்று(21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்-கச்சாய், புலோப்பளை பகுதிகளில் வெடி மருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடி மருந்து
மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு இவர்கள் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 6 குண்டுகள்
மீட்கப்பட்டுள்ளன.