கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சி (Kilinochchi) -பூநகரி பகுதியில் 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கையானது இன்று (5) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கூலர் வாகனத்தில் குறித்த கஞ்சா தொகை மீீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |