புத்தளத்தில் கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகள் கடத்திச் சென்ற இருவர் கைது (photos)
புத்தளத்தில் கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (09.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - எலுவாங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும், புத்தளத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவருமே கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இந்த கைது நடவடிக்கையின் போது 4 உரைப்பைகளில் 239 கிலோகிராம் கடலட்டைகளும் 19 உறைப்பைகளில் 921 கிலோகிராம் எடையுடைய சுறா சிறகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லொறிகளையும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 58 நிமிடங்கள் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri
