வயோதிப பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்ட இருவர் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவரிடம் முறைகேடான செயலில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் (08.05.2023) ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூதூர் பிரதேசத்தை 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மீது கடந்த (02.05.2023)ஆம் திகதி வாள்வெட்டுதாக்குதல் மேற்கொண்டதில் இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுதாக்குதலுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் மறுபடியும் இளைஞன் மீது தாக்குதல் நடத்த இளைஞனின் வீட்டை குண்டா வாள்வெட்டுக் குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு குண்டா குழுவினருக்கும் இளைஞனின் உறவினருக்கும் இடையே பெரும் வாக்குவதம் ஏற்பட்டநிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் அம்மாவான 64 வயோதிப பெண் வெளியில் வந்து குண்டா குழுவினரை வீட்டுக்குள் உள் நுழைய விடாது தடுத்து நிறுத்தியுள்ளார்.
முறைகேடான செயல்
இதன்பின் குண்டா குழுவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் வயோதிபபெண் முன்னிலையில் தனது ஆண் உறுப்பை காண்பித்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டையடுத்து தலைமறைவாகியிருந்து இருசந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் வாள்வெட்டு குழுவை சேர்ந்த மற்றும் இரண்டு சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
