மகசின் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி மகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மகசின் சிறைச்சாலை காவலர் ஒருவரும் சிறைக்காவலர்கள் இரண்டு பேரும் முன்னதாக பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர் விசாரணைகளின் பின்னர்
மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் பின்னர் நேற்று (28) மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri