இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கி விருப்பம்
இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கி விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இலங்கையின் தூதர் எம். ரிஸ்வி ஹாசன், துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹலுசி அகாரை அங்காராவில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்ததாகவும் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்தான்புலில்; நடைபெறவிருக்கும் 15 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்
கண்காட்சி 2021 க்கான உயர்மட்ட இராணுவ பிரதிநிதிகள் பரிமாற்றம் மற்றும்
ஏற்பாடுகள் குறித்து துருக்கியின் அமைச்சர் இலங்கையின் தூதருக்கு
விளக்கமளித்தார்.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
