இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த வெளிநாடு..
காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 வருடங்களாக நீடித்த இஸ்ரேல்- காசா போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் இராணுவம்
இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தப் போரில் பலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டதுடன் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.
இந்தநிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
நெதன்யாகுவுக்கு பிடியாணை
இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இராணுவ மந்திரி காட்ஸ், இராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த பிடியாணை குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam