Fact Check: உலகை உலுக்கிய துருக்கி பூகம்பம்! இரண்டாக பிளந்த பூமி - காணொளியின் உண்மை நிலவரம் வெளியானது
உலக நாடுகளை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பூமி இரண்டாக பிளந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளி போலியானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா பகுதியில் நிலநடுக்கத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், 300 கி.மீ தொலைவில் பூமி இரண்டாக பிளந்து பள்ளமாக காணப்படுவதாக காணொளியொன்று பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகின்றது.
உலக நாடுகளில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்த இந்த காணொளியானது சீனாவில் பதிவு செய்யப்பட்டவை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Turkey Syria Earthquake Caused 300 km Long Crack in Earth’s Crust#turkeyearthquake2023 #earthquake#TurkeySyriaEarthquake2023 Turkey-Syria pic.twitter.com/55PIDDmOax
— Ankita Jain (@Ankita20200) February 20, 2023
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இந்த ஆழமான பள்ளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் கூறப்படுகின்றது.
மேலும், குறித்த பள்ளமானது சீன மக்களால் Zhou Cang என அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும், Google Earth ஊடாக இந்த சீன பள்ளத்தை பொதுமக்களால் பார்வையிட முடியும் எனவும் அதன் நீளம் சுமார் 10 கி. மீ எனவும் உறுதி செய்துள்ளனர்.
இதற்கமைய, தற்போது துருக்கி நிலநடுக்கத்தில் உருவான பள்ளம் என பகிரப்பட்டுள்ள காணொளியானது 2021ல் வெளியிடப்பட்டுள்ளவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.