துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்! குவியும் பிணங்கள் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஐ தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஏழு நாட்கள் கடந்தும், மீட்பு குழுக்கள் இன்னும் உயிருடன் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
நிலநடுக்கம் காரணமாக பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளமையினால் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு குற்றம்சாட்டப்பட்ட பல அதிகாரிகளை துருக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கங்களால் துருக்கியில் திங்கள்கிழமை வரை குறைந்தது 31,643 பேரும், சிரியாவில் 4,614 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது.
நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
