உலகை உலுக்கிய துருக்கி பூகம்பம்! சேதவிபரங்களை முதன்முதலில் வெளியிட்ட உலக வங்கி
துருக்கி நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
துருக்கிக்கான உலக வங்கியின் இயக்குநர் ஹம்பர்டோ லோபஸ் இதனை கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 6 துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளது.
நிலநடுக்க பாதிப்பு
இதற்கமைய, இந்த இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளதுடன், நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதனை சீரமைக்க 2 மடங்கு கூடுதலாக செலவாகும் எனவும் 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2023 இல் 3.5% முதல் 4% வரை குறைக்கும் என்று வங்கி மதிப்பிட்டுள்ளது
இதற்கமைய, பின்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை உண்மையிலேயே கவலை அளிப்பதாக உலக வங்கி குழுமம் மற்றும் மத்திய ஆசியாவின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே கூறியுள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 46 நிமிடங்கள் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
