104 மணி நேரமாக உயிருக்கு போராடி மீட்கப்பட்ட பெண்! இறுதியில் நேர்ந்த சோகம் - கண்கலங்கிய மீட்புக்குழுவினர்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், துருக்கியில் கட்டட இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட 40 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து, ஜெர்மனி மீட்புக் குழுவினர் கண்கலங்கியுள்ள காணொளி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிரிகான் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டடத்திற்கிடையே 104 மணி நேரமாக சிக்கியிருந்த பெண்ணை வெள்ளிக்கிழமை ஜெர்மனி மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். இதனை தொடர்ந்து அந்த பெண் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினர் வாயிலாக அறிந்த ஜெர்மனி மீட்புக் குழு தலைவர், அந்த செய்தியை தனது குழுவினருடன் பகிர்ந்த போது சில மீட்புப் பணியாளர்கள் கண் கலங்கியுள்ளனர்.
இதனை் பின்னர், ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.