முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01.02.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோலின் விலை லீட்டருக்கு 30 ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
முச்சக்கரவண்டி கட்டணங்கள்
இந்த நிலையில், பெட்ரோலின் விலை ஏற்றத்திற்கு ஏற்ற வகையில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்ததப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.