புடின் என்னை அவமதித்து விட்டார்.. பகிரங்கப்படுத்திய ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தன்னை மிகவும் அவமதித்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ட்ரம்ப், பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பல்வேறு விடயங்களில் ஒரு ஐக்கிய முன்னணியை வெளிப்படுத்தினார்.
அத்துடன், அண்மைய பதற்றங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டணியை ட்ரம்ப் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், "ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பது இவ்வளவு கடினமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
போர்நிறுத்தம்..
ஜனாதிபதி புடினுடனான எனது உறவின் காரணமாக இது எளிதாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் உண்மையில் என்னை அவமதித்து விட்டார்” என மிக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அதேவேளை, ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க உக்ரைனுக்கு உதவ விருப்பமுள்ளவர்களின் கூட்டணி என்று அழைக்கப்படும் ஒரு கூட்டணியை பிரித்தானியா வழிநடத்துகிறது என்பதை ஸ்டார்மர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நமது பாதுகாப்பை எவ்வாறு கட்டியெழுப்புவது, உக்ரைனை மேலும் ஆதரிப்பது மற்றும் நீடித்த ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு புடினை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு அவரை எவ்வாறு உறுதியாக அழுத்தத்தை அதிகரிப்பது என்பது குறித்து இன்று நாங்கள் விவாதித்தோம் என்றும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri