ஜி-20 உச்சி மாநாட்டை புறக்கணித்துள்ள ட்ரம்ப்
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.
ஜி-20 மாநாடு
தென் ஆபிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.
அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆபிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆபிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
புறக்கணிக்கும் ட்ரம்ப்
இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆபிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.