ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஹமாஸ் படையினரால் இஸ்ரேல் எல்லையில் நடாத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டதோடு 250 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் கடத்தியிருந்தனர்.
இஸ்ரேலிய பிரதமருடனான பேச்சுவார்த்தை
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 20ஆம் திகதிக்குள் போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வராவிட்டால் அது தேவையற்ற ஒன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan