ஒரு நாளுக்கு மட்டுமே 1000 முதல் 1500 ரூபா தேவை! தமிழர் தலைநகரில் இப்படியொரு நிலை (Video)
தமிழர் தலைநகரான திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்திலிருந்து நோயாளர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வதற்கு 1000 ரூபா முதல் 1500 ரூபா பணம் கொடுத்தும் சாரதிகள் உரிய நேரத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இக்கிரமத்தில் அதிகளவிலான வயோதிபர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை கிளினிக் செல்ல வேண்டியுள்ள போதும் போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாமையினால் அவதிப்பட்டு வருவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



