தமிழர் தலைநகரிலிருந்து கொழும்பிற்கான குறுக்கு வீதி! உயிர் பறிபோகும் அச்சத்தில் மக்கள் (Video)
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கரடிக்குளத்திற்கு செல்லும் வீதி பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியானது தமிழர் தலைநகரான திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான குறுக்கு வீதியாக காணப்படுவதாகவும், இந்த வீதியை புனரமைப்பு செய்வதன் மூலம் சாதாரண பயணத்தை விட இவ்வீதியூடான பயணமானது பல மணித்தியாலங்களை மீதப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த வீதியானது குன்றும் குழியுமாக இருக்கும் நிலையில் அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவும் காணப்படுவதால் குறித்த வீதியில் மெதுவாக பயணிக்கும் போது யானைகளால் உயிரே போகும் அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
“தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளே இப்போது உங்கள் கண்களுக்கு நாம் தெரியவில்லையா?” எனவும் வினவுகின்றனர்.
இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் அறிக்கை,

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
