திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம்
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவ பேரணி தாக்கப்பட்டமைக்கு சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோகம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லஹிரு வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர்.
குண்டர்கள் தாக்குதல்
பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
வாகனங்களை மட்டுமின்றி அங்கு வந்தவர்கள் மீதும் தலைக்கவசத்தால் அடிக்கிறார்கள். எனினும் யாரும் முறைப்பாடு செய்யவில்லை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார் என லஹிரு தெரிவித்துள்ளார்.
1983 இல் கறுப்பு ஜூலையின் போது, அரசாங்கம் மக்களை கொல்ல அனுமதித்து காத்திருந்தது. எனவே தமிழர் என்பதாலேயே தனி பிரச்சனை. ஆனால் புலிகள் என்று சொல்லாதீர்கள்.
காலி முகத்திடல் தாக்குதல்
அது எதுவுமே இல்லாமல் மே 09 அன்று காலி முகத்திடல் மீது தாக்குதல் நடத்தியது சிங்கள பௌத்த குண்டர்கள்தான்.
ஒவ்வொரு 9ம் திகதியும் காலி முகத்திடலுக்கு நாங்கள் சென்றது மக்கள் போராட்டத்தின் வீரர்களை நினைவுகூரவே. அதற்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் எதிர்த்து போராடினோம்.
எனவே அந்த மக்களுக்கு திலீபன் ஒரு மாவீரன். உலகம் என்ன சொன்னாலும் தடியால் அடிபட்டு ஒரு மனிதன் இறந்தால் அதுதான் உண்மையாகும்.
அந்த உண்மைக்காக நிற்க ஒத்துக் கொள்ளாதவர்கள் தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்வார்கள் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இரவு தூக்கத்திற்கு ரயில் நிலையங்களை நாடியவர்... இன்று அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 19,000 கோடி News Lankasri

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்... கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து News Lankasri

திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா? Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
