தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த முத்துநகர் விவசாயிகள்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்வைக்கப்படும் கோரிக்கை
இதன்போது, "விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து நிறுவனங்களுக்க வழங்கப்பட்ட முத்துநகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு" போன்ற பதாகைகளை ஏந்தியவாறு சத்தியாக் கிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேநேரம் இன்று (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
பொலிஸார் போராட்டகாரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை. சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri