கந்தளாயில் சட்டவிரோதமான முறையில் சாராய போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 19 சாராய போத்தல்களைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரையே இன்று(13) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கந்தளாய் நகரிலிருந்து பேராறு பகுதிக்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது 19 போத்தல் சாராயத்துடன் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13,14,ஆம் திகதிகளில் மதுபான சாலைகளைத் திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
