சீரற்ற கால நிலை- டித்வா புயலால் திருகோணமலை 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு..
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 25624 குடும்பங்களை சேர்ந்த 84812 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து (25.11.2025 _2025.12.03) நேற்று (03) மாலை 03.00 pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
டித்வா புயல்
இதில் 653 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 20089 குடும்பங்களை சேர்ந்த 67733 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.46 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4936குடும்பங்களை சேர்ந்த 15285 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 530 குடும்பங்களை சேர்ந்த 1860 நபர்களும், தம்பலகாமம் 451 குடும்பங்களை சேர்ந்த 1425 நபர்களும்,மொறவெவ 139 குடும்பங்களை சேர்ந்த 432 நபர்களும்,சேருவில 1101 குடும்பங்களை சேர்ந்த 3651 நபர்களும், வெருகல் 1884 குடும்பங்களை சேர்ந்த 5616 நபர்களும்,மூதூர் 9530 குடும்பங்களை சேர்ந்த 31835 நபர்களும்,கிண்ணியா 5134 குடும்பங்களை சேர்ந்த 17013 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாகவும் மகாவலி ஆற்றுப்பெருக்கெடுப்பு காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் தற்போது நீர் மட்டம் குறைந்துள்ளதுடன் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
இதே வேலை தம்பலகாமம், கோமரங்கடவல, பதவிசிபுர,குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள இடைத் தங்கல் நிலையங்களில் இருந்தவர்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள இடைத் தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயல பிரிவில் உப்பாறு,மஜீத் நகர், பூவரசந் தீவு,சமாவச்சந்தீவு ஆகிய கிராமங்கள் நீரால் தொடர்ந்தும் மூழ்கியுள்ளது.