திருகோணமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து கலந்துரையாடல்
திருகோணமலை கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்தகுமார் தலைமையில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தொடர் பிரச்சினைகள்
"இங்கே கடற்றொழிலாளர்களால், முன்மொழியப்பட்ட பிரச்சினைகளை, அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை விரைவில், நாங்கள் முன்வைப்போம் என்றும், சிறிய பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைத்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த மாவட்டத்தில், நன்னீர் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், உரிய கவனம் எடுத்து, அதனை அபிவிருத்தி செய்வதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில், திருகோணமலை துறைமுகத்துக்கு வெளியில், சிறு இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளங்களில் சென்று கடற்றொழில் செய்யும் போது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சுருக்குவலை போட்டு கடற்றொழிலில் ஏற்பட்டிருக்கின்ற தடைகள், இரவு நேரங்களில் அட்டை தொழில் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, கடற்றொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர், மேலும், சீனக்குடா கொட்பே கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.






ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
