ஜெயலலிதா தான் எழுவர் விடுதலையில் குழப்பத்தை ஏற்படுத்தினார் - திருச்சி வேலுச்சாமி
ஏழு தமிழர் விடுதலை விவகாரம் முதன் முதலாக தீர்மான வடிவிலே சட்ட மன்றத்திலே வந்தது செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது என தமிழக காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான்கு நாட்கள் அவகாசம் தருவேன், ஒப்புதல் கிடைக்காவிட்டால் நானே விடுதலை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவரே விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்ற போது மத்திய அரசிற்கு ஏன் அனுப்பினார் என்பது தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
குழப்பத்தை உருவாக்க தான் அவர் அப்படி செய்தார் என்பது என்னுடைய தெளிவான குற்றச்சாட்டு. இன்றைக்கும் சொல்வேன், அப்போதும் சொன்னேன் என குறிப்பிட்டுள்ளார்.