மாவீரர்களுக்கு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி
மாவீரர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன்,ஏனையவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் வெளியில் நின்றுள்ளனர்.
இதன்போது,மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்து
ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.