மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமிற்கு அஞ்சலி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது நேற்று (28) மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மக்கள் சந்திப்பு
இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தநிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதன் போது கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,சட்டத்தரணி சுகாஸ்,தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

